Published : 16 Sep 2016 09:24 AM
Last Updated : 16 Sep 2016 09:24 AM

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர்: அரையிறுதி போட்டிகள் இன்று ஆரம்பம்

டிஎல்பிஎல் கிரிக்கெட் தொடரில் லீக் ஆட்டங்களின் இறுதியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. இன்று நடக்கவுள்ள முதல் அரை இறுதிப் போட்டியில் திண்டுக்கல் அணியை எதிர்த்து தூத்துக்குடி அணி மோதுகிறது.

தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) கிரிக்கெட் போட்டி யின் லீக் ஆட்டங்கள் நேற்று முன்தினம் நிறைவடைந்தன. லீக் போட்டிகளின் இறுதியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 10 புள்ளிகளைப் பெற்று ரன் ரேட் (0.96) அடிப்படையில் முதலிடத்தைப் பிடித்தது. சென்னை அணியைத் தொடர்ந்து திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 10 புள்ளிகளைப் பெற்று (ரன்ரேட் -0.69) இரண்டாவது இடத்தையும், தூத்துக்குடி ஆல்பர்ட் டூட்டி பேட்ரியாட்ஸ் அணி 3-வது இடத்தையும், லைகா கோவை கிங்ஸ் அணி 4-வது இடத்தையும் பிடித்தது.

இந்தப் போட்டித் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி திருநெல்வேலியின் சங்கர்நகரில் உள்ள இந்தியா சிமெண்ட்ஸ் மைதானத்தில் இன்று நடக்கிறது. இதில் திண்டுக்கல் மற்றும் தூத்துக் குடி அணிகள் மோதுகின்றன. சென்னையில் நாளை நடக்கவுள்ள 2-வது அரையிறுதிப் போட்டியில் கோவை அணியை எதிர்த்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி மோதவுள்ளது.

அதை தொடர்ந்து செப்டம்பர் 18-ம் தேதி, சென்னையில் இறுதிப் போட்டி நடக்கிறது. அரையிறுதிப் போட்டிகளில் வெற்றி பெறும் அணிகள் இதில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x