Published : 16 May 2016 09:28 AM
Last Updated : 16 May 2016 09:28 AM
ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும் இந்திய மல்யுத்த வீரர்களுக்கான பயிற்சி முகாம் புதன்கிழமை சோனேபட்டில் தொடங்கவுள்ளது. இந்த முகாமில் கலந்துகொள்ளும் வீரர்களின் பட்டியலில் இரண்டு முறை ஒலிம்பிக்கில் பதக்கம் வென் றவரான சுசில் குமாரின் பெயர் இடம்பெறவில்லை. இது ரியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள் ளும் அவரது கனவுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. 74 கிலோகிராம் எடைப்பிரிவில் சுசில் குமாருக்கு பதிலாக நர்சிங் யாதவின் பெயர் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் நிர்வாகி ஒருவர் இதுகுறித்து செய்தி நிறுவனம் ஒன்றிடம் கூறும்போது, “இந்த பயிற்சி முகாம் ரியோ ஒலிம் பிக் போட்டியில் கலந்துகொள்ள ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப்பட்ட வர்களுக்காக நடத்தப்படுகிறது. இந்த முகாமில் கலந்துகொள்ள சுசில் குமார் விரும்பினால் அவரை வரவேற்போம்” என்றார்.
ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளும் வீரரை தேர்ந்தெடுக்க சுசில் குமாருக்கும், நர்சிங் யாதவுக்கும் இடையே போட்டி நடத்துமாறு அரசு வலியுறுத்தியுள்ளதா என்ற கேள்விக்கு, இதுபற்றி அரசிடம் இருந்து இதுவரை உத்தரவு ஏதும் வரவில்லை” என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT