Published : 30 Jan 2017 10:32 AM
Last Updated : 30 Jan 2017 10:32 AM

சிந்துவுக்கு சாம்பியன் பட்டம்



இந்தியாவின் பி.வி.சிந்து, சையத் மோதி கிராண்ட் பிரிக்ஸ் பாட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார்.



சையத் மோதி கிராண்ட் பிரிக்ஸ் பாட்மிண்டன் போட்டி லக்னோ நகரில் நடந்தது. இதில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் ஜார்ஜியா வீராங்கனையான மரிஸ்காவை எதிர்த்து பி.வி.சிந்து ஆடினார். இப்போட்டியில் 21-13, 21-4 என்ற நேர் செட்களில் வென்று அவர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இந்த போட்டியில் அவர் சாம்பியன் பட்டம் வெல்வது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கடந்த 2014-ம் ஆண்டு இறுதிப் போட்டிவரை முன்னேறிய அவர், சாய்னா நெவாலிடம் தோற்றிருந்தார்.



ஆண்களுக்கான பிரிவில் நடந்த இறுதிப் போட்டியில் சமீத் வர்மா, 21—19, 21—16 என்ற நேர் செட்களில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இப்போட்டியில் வெல்ல அவர் 44 நிமிடங்களை மட்டுமே எடுத்துக்கொண்டார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x