Published : 18 Jan 2017 03:21 PM
Last Updated : 18 Jan 2017 03:21 PM
2008-ம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற ஆந்த்ரே ஸ்டாட்னிக் என்ற உக்ரைன் மல்யுத்த வீரரை சண்டைக்கு அழைக்கிறார் பாபா ராம்தேவ்.
மல்யுத்த லீக் போட்டிகளின் அரையிறுதியில் மும்பை மராத்தி மற்றும் என்.சி.ஆர். பஞ்சாப் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்த நிலையில் நட்பு ரீதியான போட்டியில் ஸ்டாட்னிக் தன்னுடன் மோதத் தயாரா என்று பாபா ராம்தேவ் சவால் விடுத்துள்ளார். 2-வது அரையிறுதிக்கு முன்பு 2 காட்சிப் போட்டிகள் நடைபெறுகின்றன.
இந்தச் சவாலை அவர் ஏற்றுக் கொண்டுள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் பாபா ராம்தேவ் கூறும்போது, “நான் தேசிய அளவிலான மல்யுத்த வீரர்களுடன் மோதியிருக்கிறேன். சர்வதேச வீரர் ஒருவருடன் மோதுவது இன்னும் உற்சாகமாகவே இருக்கும். யோகாவின் உண்மையான பலம் என்ன என்பதை இந்தப் போட்டியில் நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்” என்றார்.
புரோ மல்யுத்த லீக் போட்டிகளின் ஸ்பான்சர் பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT