Published : 31 May 2016 09:54 AM
Last Updated : 31 May 2016 09:54 AM

ஐபிஎல்லில் வென்றது அற்புதமான உணர்வு: யுவராஜ் சிங் பெருமிதம்

ஐபிஎல் 9-வது தொடரை சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி வென்றது. இதுதொடர்பாக அந்த அணி வீரர் யுவராஜ் சிங் கூறும்போது, "ஐபிஎல் கோப்பையை வென்றது ஒரு அற்புதமான உணர்வு. இரு உலகக்கோப்பையை வென்ற அணிகளில் இருந்த போதும், ஐபிஎல் கோப்பை வென்ற அணியில் இதற்கு முன்பு இருந்ததில்லை.

கடந்த 8 வருடங்களாக இந்த தொடரில் நான் விளையாடினாலும் தற்போது தான் கோப்பையை வெல்ல முடிந்துள்ளது. ஐபிஎல் கோப்பை ஆனது எனது உலகக்கோப்பைகளில் இணைந்து இருக்கும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x