Published : 22 Mar 2014 02:13 PM
Last Updated : 22 Mar 2014 02:13 PM

ஐடிஎப் டென்னிஸ்: இறுதிச்சுற்றில் பாலாஜி, லோபஸ்

திருச்சியில் நடைபெற்று வரும் ஐடிஎப் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜியும் ஸ்பெயினின் என்ரிக் லோபஸும் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். இறுதி ஆட்டம் இன்று காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஒற்றையர் அரையிறுதியில் ஸ்பெயினின் என்ரிக் லோபஸ் 7-5, 5-7, 6-4 என்ற செட் கணக்கில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதனை தோற்கடித்தார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் செட்டை என்ரிக் லோபஸ் கைப்பற்ற, அடுத்த செட்டை 7-5 என்ற கணக்கில் ராம்குமார் கைப்பற்றி பதிலடி கொடுத்தார். எனினும் 3-வது செட் லோபஸ் வசமாகவே, ராம்குமார் தோல்வி கண்டார்.

மற்றொரு அரையிறுதியில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி 6-4, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் சகநாட்டவரான ஜீவன் நெடுஞ்செழியனைத் தோற்கடித்தார்.

ராம்குமார் ஜோடி சாம்பியன்

ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அருண் பிரகாஷ்-ராம்குமார் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த ஜோடி தங்களின் இறுதிச்சுற்றில் 6-3, 4-6, 10-6 என்ற நேர் செட் கணக்கில் இத்தாலியின் ஜியார்ஜியோ போர்ட்டலுரி-ஸ்வீடனின் லூகாஸ் ரெனார்ட் ஜோடியை தோற்கடித்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x