Published : 14 Aug 2015 08:30 PM
Last Updated : 14 Aug 2015 08:30 PM
ஜகார்த்தாவில் நடைபெறும் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் சீன வீராங்கனையை வீழ்த்தி அரையிறுதிக்குத் தகுதி பெற்றார் சாய்னா நெவால்.
இதன் மூலம் இப்போதைக்கு வெண்கலப்பதக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீன வீராங்கனை வாங் இயான் என்பவரை 21-15, 19-21, 21-19 என்ற செட்களில் கடினமாக போராடி வீழ்த்தினார் சாய்னா.
72 நிமிடங்கள் நீடித்த இந்தக் காலிறுதி ஆட்டத்தில் விடாமுயற்சியுடன் ஆடினார் சாய்னா நெவால்.
அரையிறுதியில் இந்தோனேசிய வீராங்கனை லிண்டாவெனி பனேட்ரி என்பவரை சாய்னா எதிர்கொள்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT