Published : 09 Jan 2015 09:49 AM
Last Updated : 09 Jan 2015 09:49 AM

அஸ்வின் அரைசதம்: இந்தியா 475 ரன்களுக்கு ஆட்டமிழந்தது

சிட்னி டெஸ்ட் போட்டியின் 4-ஆம் நாளான இன்று இந்தியா தன் முதல் இன்னிங்ஸில் 475 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இன்று காலை 342/5 என்று தொடங்கிய இந்திய அணி கோலி விக்கெட்டை 147 ரன்களுக்கு இழந்தது. ரியான் ஹேரிஸ் பந்தை அவர் பிளிக் செய்ய முயன்றார். ஆனால் தரையோடு ஆடாததால் அது ஷாட் மிட்விக்கெட்டில் ராஜர்ஸ் கையில் கேட்ச் ஆனது.

இவரும் விருத்திமான் சாஹாவும் இணைந்து 6-வது விக்கெட்டுக்காக 60 ரன்களைச் சேர்த்தனர்.

விருத்திமான் சாஹா 35 ரன்கள் எடுத்து ஹேசில்வுட் பந்தில் ஸ்மித் கையில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதன் பிறகு அஸ்வினும், புவனேஷ் குமாரும் சேர்ந்தனர்.

புவனேஷ் குமார் முதலில் திணறினார். அதாவது 36 பந்துகளில் 1 ரன்னையே பெற முடிந்தது. ஆனால் அதன் பிறகு அவர் 75 பந்துகளைச் சந்த்தித்து 5 பவுண்டரிகளுடன் 30 ரன்களை எடுத்தார். அஸ்வினுடன் இணைந்து 8-வது விக்கெட்டுக்காக 65 ரன்கள் சேர்க்கப்பட்டது.

குமார் 30 ரன்களில் லயனிடம் அவுட் ஆகி வெளியேறினார். மொகமது ஷமி 2 பவுண்டரி 1 சிக்சருடன் 16 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ, உமேஷ் யாதவ், 4 ரன்களில் ரியான் ஹேரிஸிடம் வீழ்ந்தார்.

அஸ்வின் அபாரமாக விளையாடி 50 ரன்களை எடுத்தார். 111 பந்துகளில் அவர் 6 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் எடுத்து ஸ்டார்க் பந்தில் ஹேடினிடம் கேட்ச் கொடுத்து 9-வது விக்கெட்டாக வீழ்ந்தார்.

இந்தியா 475 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியா 97 ரன்கள் முன்னிலை பெற்றது.

சற்று முன் வரை ஆஸ்திரேலியா தன் 2-வது இன்னிங்சில் வார்னர் (4) விக்கெட்டை, அஸ்வினிடம் இழந்து 38 ரன்கள் எடுத்துள்ளது. புவனேஷுடன் அஸ்வின் தொடக்கத்தில் புதிய பந்தில் வீசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்சன் 13 ரன்களுடனும், ராஜர்ஸ் 21 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x