Published : 01 Feb 2018 11:33 AM
Last Updated : 01 Feb 2018 11:33 AM

வார ராசிபலன் 01/02/2018 முதல் 07/02/2018 வரை (துலாம் முதல் மீனம் வரை)

துலாம் ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் சுக்கிரன் கேந்திரம் பெற்றிருக்கிறார். எதிலும் தன்னம்பிக்கையுடன் ஈடுபட்டு காரியங்களை வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள். புதிய தொடர்புகள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். முக்கிய நபர்களின் அறிமுகமும் நட்பும் கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்பார்த்தபடி எல்லாம் நடந்தாலும் மற்றவர்கள்  தவறாகப் புரிந்து கொள்ள நேரலாம்; கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் வேகம் அதிகரிக்கும். பங்குதாரர்களுக்குள் பிரச்சினைகள் தீரும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்குத் திடீர் பயணம் நேரலாம். மேலதிகாரிகளிடம் அனுசரித்துச் செல்ல வேண்டும்.

புதிய வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு பலன் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்துச் செல்வது நன்மை தரும். நண்பர்கள், உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். பெண்களுக்குத் தன்னம்பிக்கையும் தைரியமும் உண்டாகும். கலைத் துறையினருக்கு வீண் ஆசைகள் மனத்தில் தோன்றும். அரசியல்வாதிகளுக்குக் காரியங்களில் திடீர் தடை ஏற்படலாம். மாணவர்களுக்குக் கல்வி தொடர்பான விஷயங்களில் திடீர் தடை, தாமதம் ஏற்படலாம். மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பெரியோர், ஆசிரியர் அரவணைப்பு இருக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி

திசைகள்: மேற்கு, தென்மேற்கு

நிறங்கள்: வெள்ளை | எண்கள்: 2, 5, 6

பரிகாரம்: லஷ்மி அஷ்டோத்திரம் படித்து மகாலட்சுமியை வணங்க செல்வம் சேரும்.

 

விருச்சிக ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் செவ்வாய் சஞ்சாரம் உங்களுக்கு அனுகூலமான பலன்களை தரும் வகையில் இருக்கிறது. மறைமுக எதிர்ப்புகள் குறையும். எடுத்த காரியத்தில் ஏற்பட்ட தடை, தாமதம் நீங்கும். ஆரோக்கியம் மேம்படும். வழக்குகள், தகராறுகளில் சாதகமான பலன்  கிடைக்கும். அதேவேளையில் கடுமையான முயற்சிகளும் தேவை. தொழில், வியாபாரப் போட்டிகள் நீங்கும். உற்சாகம் உண்டாகும். புதிய வர்த்தக  ஆர்டர்கள் பிடிப்பதில் வேகம் காட்டுவீர்கள். பொருளாதார உயர்வு உண்டாகும். உத்தியோகத்திலிருப்பவர்களும் உற்சாகமாகக் காணப்படுவார்கள்.

சக ஊழியர்களின் உதவியும் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். அரசாங்கம் தொடர்பான காரியங்கள் மிகச்சிறப்பாக இருக்கும். குடும்பத்திலிருந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். மனநிம்மதி உண்டாகும். உறவினர்கள் வருகை இருக்கும். பெண்கள், எந்த ஒரு செயலையும் மிகவும் அக்கறையுடன் செய்து முடிப்பீர்கள். கலைத் துறையினருக்குப் பணிகளில் கவலைகள் இருந்தாலும் நிறைவாக முடியும். அரசியல்வாதிகளுக்கு மனோதிடம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பதில் வேகம் காட்டுவீர்கள். எதிலும் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, புதன், வெள்ளி

திசைகள்: வடக்கு, வடகிழக்கு, தென்கிழக்கு

நிறங்கள்: சிவப்பு, அடர் நீலம் | எண்கள்: 2, 9

பரிகாரம்: முருகனை வணங்கி வர குடும்பப் பிரச்சினை தீரும்.

 

தனுசு ராசி வாசகர்களே

இந்த வாரம் எல்லா முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும்.  புதிய நபர்களின் அறிமுகமும் நன்மையும் ஏற்படும். சுபச்செலவுகள் இருக்கும். பணவரத்து திருப்தி தரும்.  பேச்சுத் திறமை கை கொடுக்கும். தொழில், வியாபாரம் மிதமாக இருக்கும். உத்தியோகத்திலிருப்பவர்கள் கடினமான பணிகளை செய்ய வேண்டி இருக்கும். பேச்சுத் திறமையால் மேலிடத்தில் நற்பெயர் பெறுவீர்கள். குடும்பத்திலிருப்பவர்கள் ஏதாவது குறை கூறுவார்கள்.

அனுசரித்துச் செல்ல வேண்டும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவீர்கள். பெண்களது செயல்களுக்கு பக்கபலமாக யாராவது இருப்பார்கள். கலைத் துறையினருக்கு, நட்பு வகையில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். மன வலிமை அதிகரிக்கும். மக்கள் மத்தியில் மதிப்பு கூடும். மாணவர்கள், கல்வியில் வெற்றிபெறக் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். எல்லோரிடமும் அனுசரித்துச் செல்வது நல்லது.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி

திசைகள்: கிழக்கு, தென்மேற்கு

நிறங்கள்: வெள்ளை, மஞ்சள் | எண்கள்: 1, 3, 6

பரிகாரம்: ஸ்ரீபைரவரை வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். மன அமைதி கிடைக்கும்.

 

மகர ராசி வாசகர்களே

இந்த வாரம் பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். சுபகாரியங்கள் திட்டமிட்டபடி நடக்கும். நெருக்கமானவர்களுடன் பேசி மகிழ்வீர்கள். வாகனங்களைப் பயன்படுத்தும்போது கவனம் தேவை. நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். மனத்தில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். தொழில், வியாபாரத்தில் ஆக்கபூர்வமான செயல்களை மேற்கொண்டு வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பார்கள். தொழில் பயணங்கள் ஏற்படும். உத்தியோகத்திலிருப்பவர்கள், மேலதிகாரிகள் கூறிய பணிகளை வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள்.

வருமானம் திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் நிம்மதி காணப்படும். குடும்பத்துக்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு மனதில் திடீர் கவலை ஏற்பட்டு நீங்கும். கலைத்துறையினர் நன்மை, தீமை பற்றிய கவலை இல்லாமல் எதையும் செய்ய முற்படுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு செயல்களில் வேகம் உண்டாகும். புத்தி சாதுரியமும் அறிவுத் திறனும் அதிகரிக்கும். மாணவர்கள், கல்வியில் முன்னேறத் திட்டமிட்டுச் செயலாற்றுவீர்கள். எதிலும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நன்மை தரும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: : திங்கள், வெள்ளி

திசைகள்: தெற்கு, தென்மேற்கு

நிறங்கள்: வெளிர் நீலம், பச்சை | எண்கள்: 2, 5, 6

பரிகாரம்: விநாயகப் பெருமானுக்குத் தேங்காய் உடைத்து வழிபட்டு வர காரிய தடைகள் நீங்கும்.

 

கும்ப ராசி வாசகர்களே

இந்த வாரம் குரு அனுகூலம் பெறுவதால் எல்லா காரியங்களும் சுமூகமாக நடந்து முடியும். மனத்தில் துணிச்சல் உண்டாகும். எதையும் வேகமாகச் செய்து முடிப்பீர்கள். செலவு அதிகரிக்கும். தடை, தாமதம் விலகும். மற்றவர்கள் விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டாம். தொழில், வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதையும் சாதிக்கும் திறமை உண்டாகும். எதிர்பார்த்த முன்னேற்றம் காணப்படும். சரக்குகளைக் கையாளும் போது கவனம் தேவை. உத்தியோகத்திலிருப்பவர்கள் வீண் அலைச்சலைச் சந்திக்க வேண்டி இருக்கும். வேலைகளைச் செய்து முடிப்பதில் அக்கறை காட்டுவீர்கள். புதிய பதவி கிடைக்கலாம்.

மேலிடத்தின் அனுகூலம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். குடும்ப உறுப்பினர்கள் மூலம் கூடுதல் வருமானம் கிடைக்கப் பெறலாம். நினைத்ததை நடத்தி முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். பெண்களிடம் எந்தக் காரியத்தையும் செய்து முடிப்பதில் வேகம் இருக்கும். கலைத் துறையினருக்கு, அடுத்தவரிடம் உங்களது செயல்திட்டங்களைப் பற்றி கூறுவதைத் தவிர்ப்பது நல்லது. அரசியல்வாதிகளுக்கு, மேலிடத்தின் பேச்சால் தடுமாற்றம் அடையலாம். மாணவர்களுக்கு எதிர்காலக் கல்வி பற்றிய எண்ணம் மேலோங்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்

திசைகள்: மேற்கு, தென்மேற்கு, வடகிழக்கு

நிறங்கள்: நீலம், பச்சை | எண்கள்: 2, 6

பரிகாரம்: ஆஞ்சனேயருக்கு வடைமாலை சாற்றி வழிபட காரிய வெற்றி உண்டாகும்.

 

மீன ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் குரு ராசிக்கு மறைந்திருந்தாலும் அவரின் பார்வை மூலம் சிறப்பான பலன்களைப் பெறப் போகிறீர்கள். அறிவுத்திறன் அதிகரிக்கும். சாதுரியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கப் பெறுவீர்கள். பணவரத்து அதிகரிக்கும். அடுத்தவர் பிரச்சினைகளில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது. வீண் ஆசைகள் தோன்றலாம்.  மனத்தைக் கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. சின்ன விஷயங்களில் மன நிறைவு உண்டாகும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். வாக்கு வன்மையால் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். புதிய வர்த்தக ஆர்டர்கள் தொடர்பாகப் பயணங்கள் செல்ல நேரலாம்.

உத்தியோகத்திலிருப்பவர்கள் நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டும். சக ஊழியர்களுடன் எளிதில் கருத்து வேற்றுமை உண்டாகலாம் அலுவலகத்தில் அங்கீகாரம் அதிகரிக்கும். குடும்பத்திலிருப்பவர்களுக்காக உழைக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் மோதல்கள் குறையும்.  பெண்களுக்குக் கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு நீண்ட நாட்களாக இருந்த பழைய பகைகள் மாறும். அரசியல்வாதிகள் எதிர்காலம் பற்றி முக்கிய முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள். மாணவர்களுக்குக் கல்வியில் வெற்றி பெற எடுத்த முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வியாழன், வெள்ளி

திசைகள்: வடக்கு, வடமேற்கு

நிறங்கள்: வெள்ளை, மஞ்சள் | எண்கள்: 1, 3

பரிகாரம்: குலதெய்வத்தைப் பூஜித்து வணங்கிவர எல்லா தடைகளும் நீங்கி காரிய அனுகூலம் உண்டாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x