Published : 01 Feb 2018 11:11 AM
Last Updated : 01 Feb 2018 11:11 AM
கா
ஞ்சிபுரத்துக்கு அருகில் 400 வருடங்கள் பழமைவாய்ந்த திருத்தலமாக தென்னேரி அகரம் ஸ்ரீநிவாஸ பெருமாள் ஆலயம் உள்ளது. சுமார் 80 ஆண்டுகளுக்குப் பின்னர் இங்கே எழுந்தருளியுள்ள ஸ்ரீநிவாஸ பெருமாள், ஸ்ரீ அலர்மேல் மங்கை தாயார், உள்ளூர் ஸ்ரீ தேவப்பெருமாள் சன்னிதிகள், ராஜகோபுரம், விமானங்களுக்குத் திருப்பணி நடைபெற்றது. இந்நிலையில் வரும் பிப்ரவரி மாதம் நான்காம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஏழாம் தேதிவரை பிரம்மோத்ஸவம் நடைபெறவுள்ளது. தென்னேரி அகரம் ஸ்ரீ ஸ்ரீநிவாஸ பெருமாள் கைங்கர்ய சபா சார்பில் அங்குரார்ப்பணம், அதிவாஸம், கருட சேவை, சிம்ம வாகனம், த்வஜ அவரோஹணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT