Last Updated : 03 Oct, 2018 12:47 PM

 

Published : 03 Oct 2018 12:47 PM
Last Updated : 03 Oct 2018 12:47 PM

இது எந்த நாடு? 81- 14 அடி நீளப் பாம்பு

கீழே உள்ள குறிப்புகளின் உதவியுடன் அவை உணர்த்தும் நாடு எது என்பதைக் கண்டுபிடியுங்கள்.

1. நாற்புறமும் நிலத்தால் சூழப்பட்ட ஒரே தென்கிழக்கு ஆசிய நாடு.

2. 19 ஜூலை 1949-ம் ஆண்டு பிரான்ஸிடமிருந்து சுதந்திரம் பெற்றது.

3. இந்த நாட்டின் தேசியச் சின்னம் யானை. தேசிய மலர் மர சம்பங்கி.

4. விவசாயம் முக்கியமான தொழில்.

5. வியன்டியேன் இதன் தலைநகரம்.

6. புத்தர் ஆலயங்கள் இங்கு ஏராளமாக இருக்கின்றன. பா தட் லுவாங் என்ற புத்தர் ஆலயம் 3-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இதன் கோபுரம் தங்கத்தால் செய்யப்பட்டிருக்கிறது.

7. அதிக விஷத்தன்மை கொண்ட 14 அடி நீளப் பாம்புகள் இங்கே இருக்கின்றன.

8. கம்போடியாவுக்கு அருகில் இருக்கக்கூடிய கோனே அருவியில், நயாகரா அருவியைவிட இரு மடங்கு தண்ணீர் விழுகிறது.

9. காடுகளை அழித்து வருவதால் ஆசிய யானை, சிவப்பு பாண்டா, புலி போன்ற விலங்குகளின் எண்ணிக்கை இங்கே குறைந்து வருகிறது.

10. உலகின் மிகப் பெரிய 11-வது நதியான மேகாங், இந்த நாட்டில் பாய்கிறது.

விடை: லாவோஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x