Published : 14 Aug 2015 10:48 AM
Last Updated : 14 Aug 2015 10:48 AM

ஏன் அவமானப்பட வேண்டும்?

இடஒதுக்கீட்டின் வரலாற்றை, தேவையை மறைத்தோ அல்லது புறக்கணித்தோ ஒடுக்கப் பட்ட மக்களின் நலனைக் காவு கொடுக்கக் கூடாது.

ஒவ்வொரு சாதியிலும் சமூகரீதியாக, பொருளாதாரரீதியாக ஒடுக்கப் பட்ட மக்கள் தங்கள் உரிமையைப் பயன்படுத்துவதைச் சாதிகளின் தலைவர்கள் தங்கள் சுயநலத்துக் காகத் தடுப்பது வேதனையானது. வருங்காலத் தலைமுறையினரைச் சாதிய, மதவாத சக்திகள் பின்நோக்கி இழுக்கின்றனர்.

“ஒவ்வொருவருக்குள்ளும் சாதி உறைந்திருக்கும் வரை சாதியக் கட்டுமானம் அழியப்போவதில்லை'' அதன் ஏகப் பிரதிநிதிகளின் போக்கு மாறப்போவதில்லை. இளைய தலைமுறையினர்தான் விழித்துக்கொள்ள வேண்டும்; வரலாறு அறிய வேண்டும்.

- சு.ஜெகதீசன்,அம்பை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x