Published : 09 Jan 2019 09:08 AM
Last Updated : 09 Jan 2019 09:08 AM

சிபிஐயை வைத்து மிரட்டும் பாஜக: அகிலேஷ் ஆவேசம்

மக்களவைத் தேர்தலையொட்டி, உத்தர பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் – சமாஜ்வாடி கட்சிகளுக்கு இடையே கூட்டணி அமைந்திருக்கும் நிலையில், சுரங்க ஊழல் தொடர்பாக முந்தைய சுரங்கத் துறை அமைச்சர்கள் மீது சிபிஐ விசாரணை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார் அம்மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ். 2012 முதல் 2015 வரை முதல்வராக இருந்த அவர், 2012 முதல் 2013 வரை சுரங்கத் துறை கூடுதல் பொறுப்பை ஏற்றிருந்தார். “நாங்கள் கூட்டணி அமைத்து மக்களிடம் செல்வோம். வெற்றிபெறுவோம். அது நடக்கக் கூடாது என்று நினைப்பவர்களிடம் என்ன இருக்கிறது? சிபிஐதான் இருக்கிறது. பாஜக தனது அசல் நிறத்தைக் காட்டியிருக்கிறது” என்று செய்தியாளர் சந்திப்பில் வெடித்திருக்கிறார் அகிலேஷ். சமீபத்தில் டெல்லி, லக்னோ உள்ளிட்ட 14 இடங்களில் சிபிஐ சோதனை நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x