Published : 17 Oct 2018 12:17 PM
Last Updated : 17 Oct 2018 12:17 PM
ஓய்வுபெறும் நோக்குடன் ஒரு சமயம் காந்தி மசூரியில் தங்கியிருந்தார். காந்தி எங்கு சென்றாலும் பத்திரிகை நிருபர்கள் அவரைப் பின்தொடர்ந்தனர். அப்போது பிரிட்டிஷ் மந்திரி சபை தூது கோஷ்டியினர் இந்தியா வந்திருந்தனர். இந்திய சுதந்திரத்தைப் பற்றிய பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்தது.
“இந்தியாவின் சர்வாதிகாரியாக உங்களை ஒரு நாளைக்கு நியமித்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?” என்று காந்தியிடம் கேட்டார் வெளிநாட்டுப் பத்திரிகையின் பிரதிநிதி ஒருவர்.
“முதலில் நான் அப்பதவியை ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஆனால், ஒரு நாளைக்காக சர்வாதிகாரி ஆகியேவிட்டால், டில்லி வைசிராய் மாளிகையின் குதிரை லாயத்தைப் போன்றிருக்கிற தாழ்த்தப்பட்டவர்களின் குடிசைகளைச் சுத்தம் செய்வதில் அந்த நாளைச் செலவிடுவேன்” என்று காந்தி சொன்னார்.
பத்திரிகையாளர் அடுத்த கேள்வியைக் கேட்டார், “மக்கள் உங்களது சர்வாதிகாரத்தை மேலும் ஒரு நாளைக்கு நீட்டித்தால் என்ன செய்வீர்கள்?”
காந்தி சொன்னார், “மறுநாளும் முதல் நாள் செய்த பணியைத் தொடர்ந்து செய்வேன்…”
பேச்சுக்காக அல்ல; தன்னுடைய வாழ்நாளில் கணிசமான பகுதியை ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகவும் முன்னேற்றத்துக்காகவும் செலவிட்டார் காந்தி. டெல்லியில் அவர் அதிகம் விரும்பித் தங்கிய இடம் வால்மிகி மந்திர் - தாழ்த்தப்பட்ட மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதி அது!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT