Published : 20 Jul 2018 10:10 AM
Last Updated : 20 Jul 2018 10:10 AM
கேள்விக்குறியோடு ஒரு தலைப்பை எழுதினால், பெரும்பாலும் அதற்கு வரக்கூடிய விடை ‘இல்லை’ என்பதாகவே இருக்கும். செய்திகளுக்கான தலைப்பில் கேள்விக்குறி இடம் பெற்றால், வரக்கூடிய பதில் ‘இல்லை’ தான். நடப்பு விஷயத்தில் வாசகர் அறிந்து வைத்திருப்பது என்ன என்பதையே அந்த வினா கேட்கிறது. அல்லது ஒரு நடப்பு விஷயத்தைக் குறிப்பிட்டு, அதை வாசிக்கும் வாசகரின் கருத்து என்ன என்று கேட்கிறது அந்தத் தலைப்பு. இப்படி தலைப்பில் கேள்வி கேட்கும் பாணியைப் பிரபலப்படுத்தியவர் பிரிட்டிஷ் பத்திரிகையாளர் இயான் பெட்டரிட்ஜ். எனவே, இந்த விதிக்கே அவருடைய பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. ‘பெட்டரிட்ஜின் தலைப்புக்கான விதி’ என்றும் அழைப்பார்கள்.
பிரிட்டனைச் சேர்ந்த இயான் ஹிஞ்ச்லிஃப் என்ற இயற்பியலாளரும் இதையே கூறுவார். கல்வித் துறை தொடர்பான கட்டுரைகளில் கேள்விக்குறியைப் போட்டால் வரும் பதில் இல்லை என்றுதான் இருக்கும் என்பார். பெட்டரிட்ஜ், ஹிஞ்ச்லிஃப் இருவரும் வெவ்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் என்றாலும் கருத்தில் இணைகிறார்கள்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT