Published : 13 Oct 2017 09:08 AM
Last Updated : 13 Oct 2017 09:08 AM
ஆர். ஜெகநாதன்,
ஸ்வராஜ்யா இதழின் ஆசிரியர்
மோ
டியின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் படுதோல்வியை வலதுசாரி இதழ்களும்கூட ஏற்றுக்கொள்ளத் தொடங்கியுள்ளன. அந்த நடவடிக்கை தோல்வியடைந்துவிட்டது என்பதை மோடி ஒப்புக்கொள்ள வேண்டும் என்று ஸ்வராஜ்யா இதழின் ஆசிரியர் ஆர்.ஜெகநாதன் சமீபத்தில் எழுதிய கட்டுரையொன்றில் குறிப்பிட்டிருக்கிறார்.
“பணமதிப்பு நீக்கம் பலனளிக்கவில்லை என்பதை ஏற்றுக்கொள்வதுதான் நல்ல அரசியலின் தொடக்கம். விவசாயிகளின் கோபம்தான் இதற்கு இறுதிச் சான்று. தோல்வியை நேரடியாகவோ மறைமுகமாகவோ ஒப்புக்கொள்வதை விட்டுவிட்டு உண்மையை மறைக்கும் செயல்களில் ஈடுபடுவது மோடியைக் கடுமையாகப் பாதிக்கும். பணமதிப்பு நீக்க நடவடிக்கை என்பது மோடி சுயமாக மேற்கொண்ட நடவடிக்கை. ஒருவேளை அந்தத் தோல்வியிலிருந்து அவர் பாடம் கற்றுக்கொள்வாரேயானால், அடுத்து வரும் இரண்டாண்டுகள் சிறப்பானதாக அமைய வாய்ப்பிருக்கிறது”
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT