Published : 03 Dec 2018 06:04 PM
Last Updated : 03 Dec 2018 06:04 PM

ஒரு ரயிலைப் பார்த்து, மற்றொரு ரயிலைக் கவனிக்காத சைக்கிள் ஓட்டி: நூலிழையில் உயிர் தப்பிய திகில் அனுபவம்

ஆளில்லா ரயில்வே கிராஸிங்கில் ஒரு ரயில் கடப்பதைக் கவனமாகப் பார்த்த சைக்கிள் ஓட்டி, எதிரே வந்த மற்றொரு ரயிலில் இருந்து நூலிழையில் தப்பித்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நெதர்லாந்தில் உள்ள ஆளில்லா ரயில்வே கிராஸிங்கில் சைக்கிள் ஓட்டி ஒருவர் தண்டவாளத்தைக் கடப்பதற்காகக் காத்திருந்தார். அப்போது ரயில் ஒன்று வேகமாக வந்தது. அதைக் கவனமாகப் பார்த்துக் காத்திருந்த சைக்கிள் ஓட்டி, ரயில் நகர்ந்தவுடன் தண்டவாளத்தை சைக்கிளில் கடந்தார்.

அப்போது திடீரென எதிர்ப்புறத்தில் இருந்து ரயில் விரைந்து வந்தது. எதிர்பாராத விதமாக வந்த ரயிலை அந்நபர் கடைசி நொடியில்தான் கவனித்தார். உடனே சுதாரித்தவர், விரைந்து பெடலை அழுத்தித் தண்டவாளத்தைக் கடந்தார்.

இந்த வீடியோவை நெதர்லாந்தைச் சேர்ந்த ப்ரோரயில் என்னும் யுடியூப் பக்கம் வெளியிட்டுள்ளது. பாய்ந்து வந்த ரயிலில் இருந்து கடைசி நொடியில் சைக்கிள் ஓட்டி தப்பித்த வீடியோ உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது.

வீடியோவைக் காண

வீடியோ 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x