Published : 08 Nov 2018 02:37 PM
Last Updated : 08 Nov 2018 02:37 PM
சர்கார் படத்தில் மீனவர்களின் துன்பம் குறித்து விஜய் பேசியதற்காக மீனவர் ஒருவர் நன்றி தெரிவித்து பேசிய வீடியோ ஒன்று வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.
இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலஷ்மி ஆகியோர் நடிப்பில் சர்கார் திரைப்படம் வெளிவந்துள்ளது. ஆளும் கட்சியையும், அதன் திட்டங்களை விமர்சிக்கும் வகையில் சர்கார் படத்தின் காட்சிகள் இருப்பதாக அதிமுக அமைச்சர்கள் விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சர்கார் படத்தில் மீனவர்களின் துன்பம் குறித்து விஜய் பேசியதற்காக, கிங்ஸ்டன் என்ற மீனவர் நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில்,
”எனக்கு தமிழ் சினிமாவிலுள்ள பெரிய நடிகர்கள் மீதெல்லாம் இங்குள்ள மீனவர்கள் மற்றும் இலங்கை மீனவர்கள் பிரச்சனைகளை பற்றி பேசுவதில்லையே என்ற வருத்தம் நீண்ட நாட்களாக இருந்தது. தீபாவளியன்று சர்கார் திரைப்படத்துக்கு போனேன்.
அந்த படத்தில் விஜய் ஒரு 5 நிமிடம் மீனவர்கள் பிரச்சனையை பற்றி சொல்லிருப்பார். அந்தக் காட்சியை பார்க்கும்போது உண்மையிலேயே என் கண்ணில் கண்ணீர் வந்துவிட்டது.
விஜய் அப்படத்தில் சொல்வது 100% உண்மை. அவர் சொல்வது ஒரு கதைத்தான். அதுமாதிரி எத்தனையோ ஆயிரம் கதைகள் நடந்துள்ளன. இதனை தைரியமாக சொன்னதற்கு விஜய் ஒரு சல்யூட். இதற்கான என்னை விஜய் ரசிகன் என்று நினைக்காதீர்கள். என்னை நடிகர்கள் வட்டத்துக்குள் கொண்டு வராதீர்கள்” என்று கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT