Last Updated : 12 Jul, 2019 08:14 AM

 

Published : 12 Jul 2019 08:14 AM
Last Updated : 12 Jul 2019 08:14 AM

சாலை விபத்தை குறைக்க நடவடிக்கை: தமிழக அரசுக்கு அமைச்சர் பாராட்டு

மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறும்போது, “நெடுஞ்சாலைகளில் அதிக விபத்து நிகழும் இடங்கள் மற்றும் விபத்துக்கான வாய்ப்புள்ள இடங்களை அடையாளம் கண்டு, அவற்றை சரிசெய்வதற்காக ரூ.14 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு நிதியமைச்சகம் கொள்கை அளவிலான ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த உலக வங்கியை எனது அமைச்சகம் அணுகியுள்ளது” என்றார். சாலை விபத்துகளை குறைக்க தமிழக அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு நிதின் கட்கரி பாராட்டு தெரிவித்தார்.

இதுகுறித்து கட்கரி கூறும்போது, “தமிழக அரசின் முயற்சியால் தமிழ்நாட்டில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை 15 சதவீதம் குறைந்துள்ளது. ஆனால் நாட்டின் எஞ்சிய பகுதிகளில் 1.5 சதவீதம் மட்டுமே குறைந்துள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x