Last Updated : 11 Jul, 2019 12:48 PM

 

Published : 11 Jul 2019 12:48 PM
Last Updated : 11 Jul 2019 12:48 PM

உ.பி. மதரஸா பள்ளியில் ஆயுதங்கள் பறிமுதல்: 6 பேர் கைது

உத்தரபிரதேசத்தில் மதரஸா பள்ளியொன்றை சோதனையிட்ட போலீஸார் புல்லட்கள் மற்றும் துப்பாக்கிகளை பறிமுதல் செய்ததோடு தொடர்புடைய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து காவல்துறை வட்ட அதிகாரி தெரிவித்த தகவல் வருமாறு:

காவல்துறையினருக்கு ரகசிய துப்பு கிடைத்ததை அடுத்து, ஷெர்கோட் பகுதியில் காந்த்லா சாலையில் உள்ள தாருல் குர்ஆன் ஹமீடியா மதர்ஸாவில் நேற்று போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர்.

மூன்று நாடுகளில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள், 32 போர் வகை பிஸ்டல் ஒன்று மற்றும் பெரும் எண்ணிக்கையில் புல்லட்கள் ஆகியன மதரஸாவிலிருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

இப்பள்ளியில் படிக்கும் 25 மாணவர்களில் 14 பேர் பீஹாரைச் சேர்ந்தவர்கள். மதரஸா பள்ளியில் ஆயுதங்கள் வைத்திருந்தது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இவ்வாறு காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x