Last Updated : 11 Jul, 2019 12:52 PM

 

Published : 11 Jul 2019 12:52 PM
Last Updated : 11 Jul 2019 12:52 PM

அயோத்தி வழக்கில் சமீபத்திய நிலை என்ன? - மத்தியஸ்தர்களிடம் ஒருவாரத்திற்குள் அறிக்கை கேட்ட உச்ச நீதிமன்றம்

அயோத்தி பிரச்சினையில் சமீபத்திய நிலை என்னவாக இருக்கிறது, அதில் மத்தியஸ்தர்கள் எடுத்துள்ள நடவடிக்கை என்ன என்பது குறித்து ஒரு வாரத்துக்குள்  அறிக்கையை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கறிஞர் கோபால் சிங் விஷரத் மத்தியஸ்த நடவடிக்கைகளை ரத்து செய்யக் கோரி தொடுத்திருந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இன்று இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.

அயோத்தியில் நீண்டகாலமாக இருந்துவரும் பாபர் மசூதி மற்றும் ராம ஜென்ம பூமி பிரச்சினையில் ஒருமித்த தீர்வுகாண உச்ச நீதிமன்றம் மத்தியஸ்தர்கள் குழுவை கடந்த மார்ச் மாதம் நியமித்தது. இக்குழுவுக்கு தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி இப்ராஹிம் கலிஃபுல்லா நியமிக்கப்பட்டுள்ளார். இக்குழுவில் ஸ்ரீஸ்ரீ

ரவிசங்கர், மூத்த வழக்குரைஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.

மத்தியஸ்த குழுவை ரத்து செய்யக்கோரும் மனு

இந்நிலையில் வழக்கறிஞர் கோபால் சிங் விஷரத் நடந்துகொண்டிருக்கும் மத்தியஸ்த நடவடிக்கைகளை ரத்து செய்யவும் கோரியிருந்தார். மேலும் அவர்கள் தரப்பில் இவ்வழக்கு தொடர்பாக பெரிதாக எதுவும் நடக்கவில்லை என்றும் மனுவில் குற்றம் சாட்டியிருந்தார்.

இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு மத்தியஸ்த குழுவை ரத்து செய்யக் கோரும் மனுவை இன்று விசாரித்தனர்.

ராம் லல்லா சார்பாக ஆஜராகிய, மூத்த வழக்கறிஞர் ரஞ்சித் குமார், வாதங்களின் போது, அவர்கள் மத்தியஸ்த முறையை தற்போது எதிர்க்கிறார்கள். ஆரம்பத்தில் மத்தியஸ்த குழுவை எதிர்த்தரப்பினர் ஆதரித்ததை சுட்டிக்காட்டினார்.

முஸ்லீம் தரப்புக்கு ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவான், ''மத்தியஸ்த செயல்முறையை ரத்து செய்வதற்கான வேண்டுகோளை ஏற்கக்கூடாது. இந்த புதிய வேண்டுகோள் மத்தியஸ்தர்களை அச்சுறுத்துவதற்கான ஒரு சூழ்ச்சி என்பதால் மத்தியஸ்தர்களை தொடர அனுமதிக்க வேண்டும்.

இருப்பினும், உச்ச நீதிமன்றம் மத்தியஸ்த குழுவை அமைத்ததிலிருந்து, குழுவிடமிருந்து சமீபத்திய நிலை அறிக்கையைப் பெற உரிமை பெற்றது'' என்றார்.

ஒரு வாரத்திற்குள் அறிக்கை

அப்போது,  ''மூன்று உறுப்பினர்களின் மத்தியஸ்த குழுவின் தலைவர், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி நீதிபதி (ஓய்வு) எஃப் எம் ஐ கலிஃபுல்லா, ஜூலை 18 க்குள் அறிக்கையை சமர்ப்பிக்கவும், நீதிமன்றம் மேலும் உத்தரவுகளை அதே தேதியில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படும்'' என்றும் இந்த அமர்வு தெரிவித்தது.

மேலும், ''ஒருவேளை, சமீபத்திய நிலை அறிக்கையை ஆராய்ந்த பின்னர், அயோத்தி பிரச்சினைக்கான தீர்வு காண்பதில் மத்தியஸ்தர்களின் நடவடிக்கைகள்

அடிப்படையில் முடிவுக்கு வரக்கூடாது என்று உணரும்பட்சத்தில், அயோத்தி பிரச்சினையில் உள்ள பிரதான வழக்கு வரும் ஜூலை 25 முதல் ஒவ்வொருநாள் அடிப்படையிலும் உச்ச நீதிமன்றம் நேரடியாக விசாரணை செய்யும்.''

இவ்வாறு  உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு இன்று தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x