Published : 08 Jul 2019 05:10 PM
Last Updated : 08 Jul 2019 05:10 PM

பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 200 சதவீத வரி: மாநிலங்களவையில் தீர்மானம் நிறைவேற்றம்

பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியாகும் அனைத்துப் பொருட்களுக்கும் 200 சதவீதம் சுங்கவரி விதிக்கும் தீர்மானம் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.

புல்வாமா தாக்குதல் சம்பவத்துக்கு பிறகு முக்கிய நாடு அந்தஸ்து விலக்கிக்கொள்ளப்பட்ட பிறகு பாகிஸ்தானுடன் வர்த்தக ஒப்பந்த சலுகைகள் ரத்து செய்யப்பட்டன.

பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியாகும் அனைத்துப் பொருட்களுக்கும் விதிக்கப்பட்ட 200 சதவீத சுங்கவரியை மத்திய அரச பிறப்பித்தது. இறக்குமதி வரியைக் கடுமையாக உயர்த்தியிருப்பது, பாகிஸ்தானிடம் இருந்து இறக்குமதி செய்வதற்கு ஏறக்குறையத் தடை விதித்தற்கு ஒப்பாகும்

இந்தநிலையில் பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 200 சதவீத வரி விதிக்கும் முடிவுக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் கோரப்பட்டது. இதற்கான தீர்மானத்தை நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாகூர் மாநிலங்களவையில் கொண்டு வந்தார். இந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

மத்திய அரசின் இந்த முடிவால், பாகிஸ்தானுக்கு ரூ.3 ஆயிரத்து 482.3 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் இருந்து அதிக அளவு பழங்கள், சிமென்ட்இறக்குமதி செய்யப்படுகின்றன. பழங்களுக்கு 30 முதல் 50 சதவீதம் வரை தற்போது இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. இதேபோல், சிமென்ட்டுக்கு 7.5 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x