Published : 18 Jun 2019 04:56 PM
Last Updated : 18 Jun 2019 04:56 PM

ஒவைசி பதவியேற்றபோது வந்தே மாதரம் கோஷம் எழுப்பிய பாஜக எம்.பி.க்கள்; வீடியோ காட்சி

ஹைதராபாத் தொகுதி எம்.பி. அசாதுதீன் ஒவைசி பதவியேற்றபோது, பாஜக எம்.பி.க்கள், வந்தே மாதரம், பாரத் மாதா கி ஜெய்’ என கோஷம் எழுப்பினர்.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 17-வது மக்களவையின் முதல்கூட்டத் தொடர் நேற்று காலை தொடங்கியது.  பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த எம்.பி.க்களும் இந்தி, ஆங்கிலம், போஜ்புரி, தெலுங்கு என பல மொழிகளிலும் பதவியேற்றுக் கொண்டனர்.

தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் எம்.பி.க்கள் பதவி ஏற்று வருகின்றனர். தமிழக எம்.பி.க்கள் இன்று பதவி ஏற்றுக் கொண்டனர். தொகுதி வரிசை வாரியாக இவர்கள் பதவி ஏற்றனர். இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் புதிய எம்.பி.க்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் தொகுதி எம்.பி. அசாதுதீன் ஒவைசியும் இன்று பதவியேற்றுக் கொண்டார். ‘ஆல் இந்தியா மஜ்லிஸ்-இ-இத்தேதுல் முஸ்லிமீன்’ (ஏஐஎம்ஐஎம்) கட்சி தலைவரான அவர் பாஜகவை கடுமையாக விமர்சித்து வருபவர். அவருக்கு எதிராக பாஜக தலைவர்களும் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் அவர் பதவியேற்க வரும்போது, பாஜக எம்.பி.க்கள் ‘வந்தே மாதரம், பாரத் மாதா கி ஜெய்’ என கோஷம் எழுப்பினர்.

 

 

இதனைத் தொடர்ந்து பதவியேற்றுக் கொண்ட அவர் பதிவேட்டில் கையெழுத்திட்டு விட்டு இருக்கைக்கு சென்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x