Published : 17 Jun 2019 04:45 PM
Last Updated : 17 Jun 2019 04:45 PM

திரிணமூல் எம்எல்ஏ, கவுன்சிலர்கள் பாஜகவில் இணைந்தனர்

மேற்கு வங்க மாநில திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ சுனில் சிங் இன்று பாஜகவில் இணைந்தார். அவருடன் திரிணமூல் காங்கிரஸ் கவுன்சிலர்கள் 12 பேரும் பாஜகவில் இணைந்தனர்.

மேற்கு வங்க மாநிலத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக மொத்தமுள்ள 42 இடங்களில் 18 இடங்களில் வெற்றி பெற்றது. ஆளும் திரிணமூல் காங்கிரஸ் 22 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது.

தேர்தல் முடிவு வெளியான பிறகு, மேற்கு வங்காளத்தில் திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் கவுன்சிலர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ உட்பட அடுத்தடுத்து பலர் பாஜகவில் இணைந்து வருகின்றனர்.

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் நகராட்சியைச் சேர்ந்த 17 கவுன்சிலர்கள் அண்மையில் பாஜகவில் இணைந்தனர்.

இந்நிலையில் நவ்பாரா தொகுதி திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ சுனில் சிங் இன்று பாஜகவில் இணைந்தார். அவருடன் திரிணமூல் காங்கிரஸ் கவுன்சிலர்கள் 12 பேரும் பாஜகவில் இணைந்தனர்.

இவர்கள் அனைவரும் டெல்லியில் பாஜக மூத்த தலைவர் விஜய் வர்கியா முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். பாஜக மூத்த தலைவர் முகுல் ராயும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x