Published : 17 Jun 2019 10:31 AM
Last Updated : 17 Jun 2019 10:31 AM

‘‘பாகிஸ்தான் மீது மீண்டும் ஒரு தாக்குதல்’’- இந்திய கிரிக்கெட் அணிக்கு அமித் ஷா பாராட்டு

 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வென்றது குறித்து கருத்து தெரிவித்துள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாகிஸ்தான் மீதான மற்றுமொரு தாக்குதல் இது என்றுபாராட்டு தெரிவித்துள்ளார்.

ரோஹித் சர்மாவின் அபார சதம், கோலி, ராகுலின் அற்புதமான இன்னிங்ஸ், குல்தீப், பாண்டியாவின் திருப்புமுனை விக்கெட் ஆகியவற்றால், இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டரில் நடந்த  உலகக் கோப்பையின் 22-வது லீக் ஆட்டத்தில் டக்வொர்த் லூயிஸ் விதிப்படி பாகிஸ்தானை 89 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி.

இதன் மூலம் உலகக் கோப்பைப் போட்டியில் 7-வது முறையாக தொடர்ந்து பாகிஸ்தானை வென்றுவரும் சாதனையை , வரலாற்றை இந்திய அணி தக்கவைத்துக்கொண்டது. கடந்த 1992 முதல் 2019-ம்ஆண்டுவரை இந்திய அணியை வீழ்த்த முடியாத பாகிஸ்தானின் சோகம் தொடர்கிறது.  ஆட்டநாயகனாக ரோஹித் சர்மா தேர்வு செய்யப்பட்டார்.

இந்த நிலையில் இந்திய அணியின் வெற்றி குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா  தனது ட்விட்டர் பக்கத்தில்“ இந்திய அணி பாகிஸ்தான் மீது நடத்திய மற்றுமொரு தாக்குதல். முடிவு ஒன்றுதான். அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஒட்டுமொத்த இந்திய அணிக்கு என்னுடைய வாழ்த்துகள். இந்தியர்கள் அனைவரும் உங்கள் வெற்றியை கொண்டாடுகின்றனர்” என்று பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x