Published : 15 Jun 2019 04:49 PM
Last Updated : 15 Jun 2019 04:49 PM

‘ஒவ்வொரு சொட்டு தண்ணீரும், கூடுதல்  பயிர்’ - நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு

வறட்சியை எதிர்கொள்ள ’ஒவ்வொரு சொட்டு தண்ணீரும், கூடுதல் பயிர்’ என்பதை உணர்ந்து விவசாயத்தை நாம் முன்னெடுக்க வேண்டும், புதிதாக உருவாக்கப்பட்ட ஜல்சக்தி துறை நமது தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் என நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.

நிதி ஆயோக் அமைப்பின் ஐந்தாவது ஆட்சிமன்றக் குழு கூட்டம் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் அனைத்து மாநிலங்களின் முதல்வர்கள், ஆளுநர்கள், துணை நிலை ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். இந்தக் கூட்டத்தில் நிதி ஆயோக்கின் துணைத் தலைவர், தலைமைச் செயல் அதிகாரி, உறுப்பினர்களும் பங்கேற்றுள்ளனர்.

 

 

இந்தக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியதாவது:

வரும் 2024-ம் ஆண்டு 5 டிரில்லியன் பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியாவை உருவாக்குவதே நமது இலக்கு. இது சவாலானது. ஆனால் நம்மால் இந்த வெற்றியை நிச்சயமாக எட்ட முடியும். வளர்ந்த பொருளாதாரத்தை உருவாக்குவதில் மாநிலங்களின் பங்கு மிக முக்கியம்.

நாடுமுழுவதும் பல இடங்களில் கடுமையான வறட்சி நிலவுகிறது. வறட்சியை எதிர்கொள்ள ‘ஒவ்வொரு சொட்டு தண்ணீரும், கூடுதல் பயிர்’ என்பதை உணர்ந்து விவசாயத்தை நாம் முன்னெடுக்க வேண்டும். புதிதாக உருவாக்கப்பட்ட ஜல்சக்தி துறை நமது தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காணும்.

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x