Published : 23 May 2019 08:37 AM
Last Updated : 23 May 2019 08:37 AM
அமேதி தொகுதியில் ராகுல் காந்தியும், ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தியும் முதல்கட்டமாக முன்னிலை பெற்றுள்ளதாகத் தகவல் வந்துள்ளது.
17-வது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக முடிந்து, இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 542 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கைக்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அமேதி தொகுதியில் வாக்கு எண்ணிக்கையில் முதல் கட்ட வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. இதில் அமேதி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ரேபரேலி தொகுதியில் போட்டியிட்ட சோனியாகாந்தி முன்னிலை பெற்றுள்ளனர்.
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ் நாத் சிங் முன்னிலை பெற்றுள்ளார். கேரளாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி பின்னடைந்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT