Published : 19 May 2019 05:30 PM
Last Updated : 19 May 2019 05:30 PM

சந்திரபாபு நாயுடு டெல்லியில் முகாம்: சோனியா உள்ளிட்ட தலைவர்களுடன் தொடர்ச்சியாக ஆலோசனை

மத்தியில் பாஜக அல்லாத அரசை அமைக்க தீவிர முயற்சி மேற்கொண்டுள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு டெல்லியில் இரண்டாவது நாளாக இன்று சோனியா காந்தி மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்களையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

 

மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி, இதுவரை 6 கட்டத் தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. இன்று 7-ம் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது. வரும் 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்து தேர்தல் முடிவுகள் வர இருக்கின்றன

 

வாக்கு எண்ணிக்கைக்கு ஒரு சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் அடுத்தகட்டமாக புதிய அரசு அமைப்பது தொடர்பாகவும், தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி தொடர்பாகவும் இப்போதே ஆலோசனைகளை தொடங்கியுள்ளன.

 

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு போட்டியாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் களமிறங்கியுள்ளார். மாநில கட்சிகளின் கூட்டத்தை டெல்லியில் நடத்த அவர் திட்டமிட்டுள்ளார்.

 

இதுதொடர்பாக சந்திரபாபு நாயுடு டெல்லியில்  நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் லக்னோ சென்ற அவர் அகிலேஷ் யாதவ், மாயாவதி ஆகியோரை சந்தித்து பேசினார்.

இந்தநிலையில் டெல்லி திரும்பிய அவர் இன்று மீண்டும் பல்வேறு கட்சித் தலைவர்களையும் சந்தித்து வருகிறார்.

காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் மே 23-ம் தேதி நடைபெறும் பெறும் என ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி அறிவித்துள்ளார். இதன் தொடர்ச்சியாக சோனியா காந்தியை அவர் சந்தித்தார்.

அப்போது, பாஜக அல்லாத அரசு அமைப்பது தொடர்பாக, அனைத்து கட்சிகளையும் கொண்ட கூட்டணியை அமைப்பது தொடர்பாக அவரகள் ஆலோசனை நடத்தினர். முன்னதாக அவர் ராகுல் காந்தி, சரத்பவார் உள்ளிட்டேரை இன்று இரண்டாவது நாளாக சந்தித்து பேசினார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x