Published : 19 May 2019 04:13 PM
Last Updated : 19 May 2019 04:13 PM

மக்களவைத் தேர்தல்; மேற்குவங்கத்தில் பயங்கர வன்முறை; வாகனங்கள் மீது தாக்குதல்

மேற்குவங்கத்தில் 7-ம் கட்டமாக 9 தொகுதிகளில் மக்களவைத் தேர்தல் நடந்து வரும் நிலையில் பல இடங்களில் பயங்கர வன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ளன.

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக தேர்தல் நடை பெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை மே 23-ம் தேதி நடை பெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி, 6 கட்ட தேர்தல் ஏற்கெனவே நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் 7-வது மற்றும் இறுதி கட்டமாக 59 தொகுதிகளில் இன்று தேர்தல் நடந்து வருகிறது. இதில், மேற்குவங்க மாநிலத்தில் மீதமுள்ள 9 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

அங்கு முந்தைய தேர்தல்களை போலவே இந்தமுறையும் பயங்கர வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. பல இடங்களில் திரிணாமுல் மற்றும் பாஜக தொண்டர்கள் மோதி வருகின்றனர்.

வன்முறை சம்பவங்கள் தொடர்பாக, பாஜகவும் திரிணாமுல் காங்கிரஸூம் பரஸ்பரம் புகார் தெரிவித்து வருகின்றன.

மதுராபூரில் பாஜக வேட்பாளர் பாபுல் சுப்ரியோ தாக்கப்பட்டார். அவரை திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் தாக்கியதாக பாஜக நிர்வாகிகள் புகார் தெரிவித்துள்ளனர். அவருடன் சென்ற வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டன.

பாஜக வேட்பாளர்கள் அனுபவ் ஹசாரா, நிரஞ்சன் ராய் உள்ளிட்டோரின் வாகனங்களும் தாக்கப்பட்டன. இதுபோலவே சில வாக்குச்சாவடிகளில் நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டுள்ளன. பரசராத்தில் பாஜக அலுவலகம் மீது கல்வீச்சு சம்பவங்கள் நடந்தன.

வன்முறைச் சம்பவங்களை அடுத்து அங்கு கூடுதல் துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x