Published : 02 May 2019 12:00 AM
Last Updated : 02 May 2019 12:00 AM
மகாராஷ்டிர மாநிலம் வார்தாவில் நடந்த கூட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை தாக்கி மோடி பேசினார் என்று காங்கிரஸ் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்யப்பட்டது.
இந்த புகாரை விசாரித்த தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், “இந்த விவகாரம் தொடர்பாக மகாராஷ்டிர மாநில, தலைமைத் தேர்தல் அதிகாரி அளித்த அறிக்கையை ஆழ்ந்து ஆய்வு செய்தோம். அதில் பிரதமர் மோடி வார்தாவில் பேசிய பேச்சில், எந்தவிதமான தேர்தல் நடத்தை விதிமுறை மீறலும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்ட மீறலும் இல்லை" எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ஆணையத்துக்கு மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரிநேற்று எழுதியுள்ள கடிதத்தில், ‘‘பிரதமர் பேசியதில் விதி மீறல் இல்லை என்று தேர்தல் ஆணையம் நற்சான்று பத்திரம் வழங்கியுள்ளது. அரசு இயந்திரங்களையும், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளையும் பிரதமர் விதிகளை மீறி பயன்படுத்துகிறார். இதை எப்படி தேர்தல் ஆணையம் அனுமதிக்கலாம் என்பதே எங்கள் கேள்வி’’ என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT