Published : 21 Apr 2019 10:48 AM
Last Updated : 21 Apr 2019 10:48 AM

ராகுல் காந்தி அடுத்த தேர்தலில் அண்டை நாட்டில் தொகுதியை தேடுவார்: பியூஷ் கோயல் கிண்டல்

ஸ்மிருதி இரானி ராகுலை வீழ்த்துவார், அதுமட்டுமின்றி வயநாட்டிலும் ராகுல் தோல்வியை அடைவார், இதனால் அடுத்த தேர்தலில் போட்டியிட அண்டை நாடுகளில் தொகுதியை தேடுவார் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.  

உத்தரப் பிரதேசத்தின் அமேதி தொகுதியில் மட்டுமே போட்டியிட்ட ராகுல் இந்த முறை கேரளாவின் வயநாட்டிலிருந்தும் போட்டியிடுகிறார்.தென்மாநிலம் ஒன்றிலிருந்து ராகுல் போட்டியிடுவது இதுவே முதன்முறை.

இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய மத்திய ரயில்வே அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான பியூஷ் கோயல் கூறியதாவது:

உத்தர பிரதேச மாநிலம் அமேதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. ஸ்மிருதி இரானியால் தோற்கடிக்கப்படுவோம் என்ற அச்சத்திலேயே  வயநாட்டில் அவர் போட்டியிடுகிறார். வயநாட்டில் இடதுசாரிகளுக்கு எதிராக போட்டியிடும் அவர், அக்கட்சியினரை விமர்சிக்க போவதில்லை என கூறுகிறார்.

தனது எதிர்ப்பாளர்களை எதிர்த்து பேச தைரியம் இல்லாத ஒரு தலைவர் நாட்டுக்கு சேவை செய்ய இயலாது’’ அவர் அச்சத்துடன் உள்ளார்.

அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி ராகுலை வீழ்த்துவார். அதுமட்டுமின்றி வயநாட்டிலும் ராகுல் தோல்வியை அடைவார். இதனால் அடுத்த தேர்தலில் போட்டியிட அண்டை நாடுகளில் தொகுதியை தேடுவார்.

இவ்வாறு பியூஷ் கோயல் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x