Published : 20 Apr 2019 02:36 PM
Last Updated : 20 Apr 2019 02:36 PM

‘வேகத்தடை’ மம்தா பானர்ஜி தூக்கமின்றி தவிக்கிறார்: மேற்குவங்க கூட்டத்தில் மோடி பேச்சு

மக்களவைத் தேர்தலில் முதல் 2 கட்ட வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளநிலையில் ‘வேகத்தடை’ மம்தா பானர்ஜி தூக்கமின்றி தவிக்கிறார் என பிரதமர் மோடி பேசினார்.

மேற்குவங்க மாநிலம் தெற்கு தினாபூரில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியதாவது:

மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி மண், மக்கள், மாநிலம் எனக்கூறி மக்களை ஏமாற்றி வருகின்றார். ஆனால் அவரது கட்சி வேட்பாளர்களுக்காக வங்கதேச நடிகர்கள் வந்து பிரச்சாரம் செய்கின்றனர். வெளிநாட்டைச் சேர்ந்தவர்களை வைத்து பிரச்சாரம் செய்ய இவர்கள் வெட்கப்படுவதில்லை.

மக்களவைத் தேர்தலில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்து விட்டது. இந்த விவரங்கள் எல்லாம் வந்த பிறகு, நலத்திட்டங்களுக்கு வேகத்தடையாக இருந்து வரும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தூக்கமின்றி தவித்து வருகிறார். பாஜகவின் வெற்றியை சகித்துக் கொள்ள அவரால் முடியவில்லை.

வங்கதேத்தில் இருந்து மேற்குவங்கத்தில் ஊடுருபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு ஊடுருவல்காரர்களுக்கு எதிரான நடவடிக்கையை மத்திய பாஜக அரசு தீவிரப்படுத்தும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x