Last Updated : 11 Apr, 2019 02:55 PM

 

Published : 11 Apr 2019 02:55 PM
Last Updated : 11 Apr 2019 02:55 PM

ரேபரேலியில் வேட்புமனு தாக்கலுக்கு முன் ஹோமம் வளர்த்த சோனியா காந்தி

ரேபரேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்காக ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்தி வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்னதாக ஹோமம் வளர்த்து பூஜை புனஸ்காரங்களில் ஈடுபட்டார்.

ரேபரேலியில் வேட்புமனு தாக்கலுக்கு முன் ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்தி யாகம் வளர்த்து வழிபட்டார். இப்பிரார்த்தனையில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி அவரது கணவர் ராபர்ட் வதேரா உடனிருந்தனர்.

அதன் பின்னர், வேட்பு மனு தாக்கலுக்கான படிவங்களை பூர்த்தி செய்வதற்கு முன்பாக, ரோடு ஷோ எனப்படும் சாலைவழிப் பயணமாகவே மக்களைச் சந்திக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

2004 தொடங்கி ரேபரேலி தொகுதியில் தொடர்ந்து சோனியாக காந்தி வெற்றிபெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உத்தரப் பிரதேசம், நாட்டிலேயே அதிகபட்சமாக 80 தொகுதிகள் உள்ள மாநிலம் என்பதால் இத்தேர்தலில் ஏப்ரல் 11 முதல் மே 19 வரையுமான 7 கட்ட வாக்குப் பதிவுகளும் நடைபெறுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x