Published : 28 Mar 2019 08:16 AM
Last Updated : 28 Mar 2019 08:16 AM

மோடியை ஒடுக்க ஒன்றுசேர வேண்டும்: சந்திரபாபு அழைப்பு

அமராவதியில் நேற்று தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு டெலிகான்பரன்ஸ் மூலம் உரையாடினார்.

அப்போது அவர் பேசியதா வது: மோடியும், அமித் ஷாவும் ஜனநாயகத்தை சீரழிக்க முடிவு செய்துள்ளனர். தேர்தல் ஆணையத்தையும் இவர்கள் விட்டு வைக்கவில்லை. சில அமைப்புகளின் பின்னால் இருந்து பாஜக இயக்கி மதங் களிடையே பிரச்சினையை உண் டாக்கி வருகிறது. இவர்களின் அராஜகத்தை ஒடுக்க மக்கள் ஒன்று திரள வேண்டும். நாட்டுக்கு மோடி ஒரு விபத்தை போன்றவ ரென்றால், ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திராவுக்கு பெரும் விபத்தை போன்றவராவார்.

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x