Published : 22 Mar 2019 12:41 PM
Last Updated : 22 Mar 2019 12:41 PM

ஜம்மு காஷ்மீர் என்கவுன்ட்டரில்7 தீவிரவாதிகள் பலி

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் பபடையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 7 தீவிரவாதிகள்  என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தரப்பில், “ ஜம்மு காஷ்மீரில் ஷோபியன் மற்றும் பந்திபோரா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் இதுவரை 7 பேர் கொல்லப்பட்டனர்.

எனினும் இதில் பலர் கொல்லப்பட்டிருக்கலாம். இந்த தேடுதல் வேட்டையில் கொல்லப்பட்டவர்கள்  குறித்த முழுவிவரம் விரைவில் தெரிவிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோபோரே,பாராமுல்லா மாவட்டத்திலும் தீவிரவாதிகளுக்கு எதிராக தேடுதல் வேட்டை  நடந்து வருகிறது.

இதன் காரணமாக அங்கு கல்வி நிலையங்கள் மற்றும் இணைய தள சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x