Published : 27 Feb 2019 07:52 AM
Last Updated : 27 Feb 2019 07:52 AM
பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து எல்லையில் இந்திய ராணுவப் படைகள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை ஒட்டிய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் (எல்ஓசி) அமைதி நிலவுகிறது.
இதுகுறித்து ராணுவ உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “ஜம்மு-காஷ்மீரை ஒட்டிய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் அமைதி நிலவுகிறது. தாக்குதலுக்குப் பின்னர் அங்கு எந்தவித விரும்பத்தகாத சம்பவமும் நடைபெறவில்லை. இருப்பினும் படைகள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுல்ளன. விமானப் படை தாக்குதலுக்கு முன்னதாக, எல்லையில் பாகிஸ்தான் வீரர்கள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய நிலைகளை நோக்கி சுட்டனர். இது சிறிது நேரம் நடந்தது. அதன் பின்னர் சுடுவது நிறுத்தப்பட்டது. ஜம்மு, சம்பா, கத்துவா மாவட்டங்களை ஒட்டி 190 கிலோமீட்டர் தூரத்துக்கு அமைந்துள்ள சர்வதேச எல்லை (ஐபி) பகுதியில் அமைதி நிலவுகிறது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT