Published : 20 Feb 2019 07:57 AM
Last Updated : 20 Feb 2019 07:57 AM
பாஜகவில் இணைந்த முன்னாள் ஐபிஎஸ் பெண் அதிகாரி பாரதி கோஷை கைது செய்யக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஐபிஎஸ் அதிகாரியான பாரதி கோஷ் மேற்கு வங்கத்தில் பணி யாற்றி வந்தார். மேற்கு வங்க முதல் வர் மம்தா பானர்ஜிக்கு நெருக்க மானவராகவும் அவர் கருதப்பட் டார். ஓய்வு பெற்ற நிலையில் இவர் அண்மையில் பாஜகவில் இணைந்தார். இந்நிலையில் அவர் மீது 10 வழக்குகளை மேற்கு வங்க அரசு பதிவு செய்துள்ளது. இதில் 7 வழக்குகளில் தன்னைக் கைது செய்ய தடையை பாரதி கோஷ் நீதிமன்றத்தில் பெற்றார்.
இந்நிலையில் மேலும் 3 வழக்கு களில் தன்னை கைது செய்ய தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் பாரதி கோஷ் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு ஏ.கே.சிக்ரி தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மேற்கு வங்க அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதிடும்போது, "பாரதி கோஷும், அவரது தனி பாதுகாப்பு அதிகாரியும் இணைந்து தங்க மோசடி வழக்கில் சிக்கியுள்ளனர். மற்ற வழக்குகளிலும் இவர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர். எனவே பாரதி கோஷின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்கக்கூடாது” என்று வாதிட்டார்.
விசாரணைக்குப் பின்னர் நீதிபதிகள், பாரதி கோஷை கைது செய்யக்கூடாது என்று உத்தர விட்டனர். மேலும் வழக்கு விசார ணையை 3 வாரங்களுக்கு நீதிபதி கள் ஒத்திவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT