Published : 14 Feb 2019 05:16 PM
Last Updated : 14 Feb 2019 05:16 PM

காஷ்மீரில் தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல்: பலி எண்ணிக்கை 30 ஆக அதிகரிப்பு

காஷ்மீர் மாநிலத்தில் ஜெய்ஷ் -இ- முகமது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் மத்திய ரிசர்வ் படையைச் சேர்ந்த 30 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம், அவந்திப்போராவில், ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில், ரிசர்வ் படையைச் சேர்ந்த வீரர்கள் வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். ஜம்முவில் இருந்து ஸ்ரீநகரில் உள்ள முகாமுக்கு வீரர்கள் இந்த வாகனங்களில் சென்றனர். மொத்தம் 70 வாகனங்கள் அணி வகுத்துச் சென்றன. அப்போது அவர்கள் சென்ற வாகனங்களை குறி வைத்து குண்டுகள் வெடித்தன.

இதில் குண்டு வெடித்த வாகனத்தில் இருந்த ஏராளமான வீரர்கள் சிக்கிக் கொண்டனர். இந்த பயங்கர தாக்குதலில் 30 வீரர்கள் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிகிறது. தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. பலர் காயமடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x