Published : 30 Jan 2019 03:01 PM
Last Updated : 30 Jan 2019 03:01 PM
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ராவணன் என்றும், பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ராவை சூர்ப்பனகை என்றும் விமர்சித்து உ.பி பாஜக எம்எல்ஏ பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தனது சகோதரி பிரியங்கா காந்தி வத்ராவை காங்கிரஸின் பொதுச் செயலாளராக கட்சித் தலைவர் ராகுல் காந்தி நியமித்தார். இதன் மூலம் தீவிர அரசியலுக்கு பிரியங்கா வந்துள்ளார். அரசியல் வருகைக்கு பிறகு பிரியங்காவை பாஜகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
காங்கிரஸைப் பொறுத்தவரை ஓஆர்ஓபி (ஒரே பதவி ஒரே ஓய்வூதியம்) என்றால் ஒரே ராகுல், ஒரே பிரியங்கா என்று பாஜக தலைவர் அமித் ஷா சாடினார். இதுமட்டுமின்றி அக்கட்சி நிர்வாகிகள் சிலர் பிரியங்காவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்தநிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் பைரியா தொகுதி பாஜக எம்எல்ஏ சுரேந்திர சிங் கூறியதாவது:
‘‘அரசியலை பொறுத்தவரை பிரதமர் மோடி தான் ராமர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ராவணன், அவரது தங்கை பிரியங்கா சூர்ப்பனகை. ராமருக்கும், ராவணனுக்கும் தற்போது போர் தொடங்கியுள்ளது. ராமருக்கு எதிராக முதலில் சூர்ப்பனகையை தான், அதுபோல ராகுல் காந்தி தனது தங்கை பிரியங்காவை முதலில் அனுப்பியுள்ளார். யாரை அனுப்பினாலும் இந்த போரில் ராவணன் தோற்கப்போவது உறுதி. இலங்கையை வீழ்த்தி ராமர் வெற்றி பெறுவார்’’ என அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT