Published : 23 Jan 2019 11:45 AM
Last Updated : 23 Jan 2019 11:45 AM
கர்நாடக மாநிலம் துமக்கூருவில் உள்ள சித்தகங்கா மடத்தின் மூத்த மடாதிபதியும், கல்வியாளருமான சிவகுமார சுவாமி (111) நேற்று முன்தினம் காலமானார். சித்தகங்கா அறக்கட்டளை மூலம் லட்சக்கணக்கானோருக்கு இலவச கல்வி மற்றும் மருத்துவ சேவை வழங்கிய இவரது மறைவுக்கு 3 நாட்கள் துக்கம் கடைப்பிடிப்பதாக கர்நாடகா அரசு அறிவித்தது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர்.
நேற்று சித்தகங்கா மடத்தில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர் அவரது உடல் மீது தேசியக் கொடி போர்த்தப்பட்டு வேத மந்திரங்கள் முழங்கியவாறு, சித்தகங்கா மடத்துக்குள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. பின்னர், தேசிய கீதம் இசைக்கப்பட்டு, 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் அமர்ந்த நிலையிலே அடக்கம் செய்யப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT