Published : 23 Jan 2019 11:44 AM
Last Updated : 23 Jan 2019 11:44 AM

ரஷ்யாவில் இந்தியர்கள் உள்பட 14 பேர் பலி

ரஷ்யாவின் கருங்கடலை ஒட்டி கெர்ச் நீரிணை பகுதி உள்ளது. இந்த நீரிணைப் பகுதியில் நேற்று முன்தினம் சென்ற 2 கப்பல்களில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில் கப்பல்களில் இருந்த 14 மாலுமிகள் இறந்தனர். இறந்தவர்கள் இந்தியா, துருக்கி, லிபியாவைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது.

தீப்பிடித்த 2 கப்பல்களும் தான்சானியாவைச் சேர்ந்தவை என்று தெரியவந்துள்ளது. ஒரு கப்பலில் திரவ இயற்கை எரிவாயு இருந்தது. மற்றொரு கப்பல் எண்ணெய் ஏற்றிச் செல்லும் டாங்கர் வகையைச் சேர்ந்ததாகும். ஒரு கப்பலில் இருந்து மற்றொரு கப்பலுக்கு எரிபொருளை மாற்றும்போது இந்த விபத்து நடந்துள்ளது. ஒரு கப்பலில் 17 மாலுமிகள் இருந்துள்ளனர். இதில் 9 பேர் துருக்கியையும், 8 பேர் இந்தியாவையும் சேர்ந்தவர்கள்.

மற்றொரு கப்பலில் 15 பேர் இருந்துள்ளனர். இதில் 7 பேர் துருக்கியையும், 7 பேர் இந்தியாவையும், ஒருவர் லிபியாவையும் சேர்ந்தவர்கள் எனத் தெரிகிறது.  இந்த 2 கப்பல்களிலும் சேர்த்து 14 பேர் இறந்துள்ளனர் என ரஷ்ய செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. இதில் எத்தனை பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவில்லை. அங்கு தொடர்ந்து மீட்புப் பணி நடைபெற்று வருவதாகவும், சிலர் கடலில் குதித்து உயிர்பிழைத்ததாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x