Published : 13 Jan 2019 07:53 PM
Last Updated : 13 Jan 2019 07:53 PM

பொருளாதார அடிப்படையில் 10% இடஒதுக்கீடு நாளை அமல்: முதல் மாநிலம் குஜராத்

பொதுப்பிரிவினரில் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை முதல் மாநிலமாக குஜராத் நாளை நடைமுறை படுத்துகிறது.

பொருளாதார ரீதியாகப் பின்தங்கி இருக்கும் உயர்சாதி ஏழைகளுக்குக் கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. இதற்கு குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளித்துவிட்டநிலையில் அது சட்டமாகியுள்ளது. இதைதொடர்ந்து, அவரது ஒப்புதலுடன் சட்டம் அரசிதழிலும் வெளியிடப்பட்டு நடைமுறைக்கு வந்ததுஉ

இந்நிலையில், மத்திய அரசு அறிவித்த 10 சதவீத இட ஒதுக்கீட்டை முதல் மாநிலமாக குஜராத் அரசு அமல்படுத்துகிறது. அம்மாநிலத்தில் நாளை முதல் இந்த சட்டம் அமலுக்கு வருவதாக அம்மாநில முதல்வர் விஜய் ருபானி அறிவித்துள்ளார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x