Published : 13 Jan 2019 08:22 AM
Last Updated : 13 Jan 2019 08:22 AM

10% இட ஒதுக்கீடு மசோதா: குடியரசு தலைவர் ஒப்புதல்

அரசின் கல்வி, வேலைவாய்ப்பில் உயர் சாதி ஏழைகளுக்கு (பொது பிரிவினர்) 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கி உள்ளார். இதையடுத்து இந்த மசோதா சட்டமாகியுள்ளது.

பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க மத்திய அமைச்சரவை கடந்த 7-ம் தேதி ஒப்புதல் வழங்கியது. ஆனால், பொருளாதார ரீதியாக இட ஒதுக்கீடு வழங்க சட்டத்தில் இடம் இல்லை. எனவே, அரசியல் சாசன (124-வது திருத்த) மசோதா 2019 மக்களவையில் 8-ம் தேதியும் மாநிலங்களவையில் 9-ம் தேதியும் நிறைவேறியது.

இதையடுத்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் ஒப்புதலுக்கு இந்த மசோதா அனுப்பி வைக்கப்பட்டது. அவர் இந்த மசோதாவுக்கு நேற்று ஒப்புதல் அளித்துள்ளார். மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிவிக்கையில் இந்தத் தகவல் வெளியாகி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x