Published : 20 Dec 2018 08:48 AM
Last Updated : 20 Dec 2018 08:48 AM

தொழிலதிபர் நிபோஜ்வானியிடமிருந்து திலீப் குமார் பங்களாவை காப்பாற்ற உதவ வேண்டும்: மனைவி சாய்ரா பானு வேண்டுகோள்

மும்பையின் பாலி ஹில் பகுதியில் பிரபல இந்தி நடிகர் திலீப் குமாருக்கு (96) சொந்தமாக ஒரு பங்களா உள்ளது. இந்த பங்களா அமைந்துள்ள நிலத்துக்கு கட்டுமான நிறுவன அதிபர் சமீர் போஜ்வானி போலி ஆவணம் மூலம் உரிமை கொண்டாடுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், திலீப் குமாரின் ட்விட்டர் பக்கத்தில் இது தொடர் பாக சாய்ரா பானு நேற்று முன்தினம் இரவு ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “பிரத மர் மோடி அவர்களை சந்திக்க விரும்புகிறேன். இதற்காக எனக்கு நேரம் ஒதுக்க வேண்டும். முதல்வர் தேவேந்திர பட்னாவிஸின் தொடர் வாக்குறுதிகளை நம்பி களைப்படைந்துவிட்டேன். எனது கணவர் திலீப் குமாருக்கு சொந்தமாக உள்ள ஒரே ஒரு வீட்டை, நில மோசடியாளரான சமீர் போஜ்வானியிடமிருந்து பாது காக்க நீங்கள்தான் உதவ வேண் டும். நீங்கள்தான் எனக்கு கடைசி நம்பிக்கை” என கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x