Published : 16 Dec 2018 08:32 AM
Last Updated : 16 Dec 2018 08:32 AM
ரஃபேல் வழக்கில் மத்திய அரசு அளித்த விவரங்கள், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் தவறாகக் குறிப்பிடப்பட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது.
பிரான்ஸின் தஸ்ஸோ நிறுவனத் திடம் இருந்து ரஃபேல் போர் விமா னங்களை வாங்கும் ஒப்பந்தத் தில் முறைகேடுகள் நடைபெற்றிருப் பதாக குற்றம் சாட்டி உச்ச நீதி மன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த ஒப்பந்தத் தில் எந்த முறைகேடும் நடைபெற வில்லை என்று தீர்ப்பளித்தது.
"மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியின் (சிஏஜி) அறிக்கையில் ரஃபேல் போர் விமானத்தின் விலை சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, பொது கணக்கு குழுவால் (பிஏசி) ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது" என்று உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும் பிஏசி தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியபோது, "நாடாளுமன்றத்திலோ, பிஏசி குழுவிலோ சிஏஜியின் அறிக்கை இதுவரை தாக்கல் செய்யப்பட வில்லை. உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பொய் கூறியுள்ளது. இதுதொடர்பாக விளக்கம் கேட்க அட்டர்னி ஜெனரல், மத்திய கணக்கு தணிக்கை அதிகாரிக்கு சம்மன் அனுப்ப நடவடிக்கை எடுக்கப் படும்" என்று தெரிவித்தார்.
இது குறித்து அரசு வட்டாரங் கள் கூறியதாவது:
ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான விவரங்கள் உச்ச நீதிமன்றத்தில் சீலிடப்பட்ட உறையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், போர் விமான ஒப்பந்த விவரங்கள் மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி யிடம் (சிஏஜி) பகிர்ந்து கொள்ளப் பட்டுள்ளது. சிஏஜியின் அறிக்கை நாடாளுமன்றம் மற்றும் நாடாளு மன்ற பொது கணக்கு குழுவில் தாக்கல் செய்யப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்கல் செய்யப்பட்டதாக மத்திய அரசு கூறவில்லை.
ஆனால் தீர்ப்பில் தாக்கல் செய்யப்பட்டு விட்டதாகக் கூறப்பட் டிருக்கிறது. இந்த தீர்ப்பின் வாச கங்களை மாற்றக் கோரி மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. -பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT