Published : 14 Dec 2018 08:08 AM
Last Updated : 14 Dec 2018 08:08 AM
ராஜஸ்தானில் அரசியல் நோக்கர்கள் உற்றுநோக்கிய பகுதிகளில் ஆல்வார் பிராந்தியமும் ஒன்று. ‘பசுகுண்டர்கள்’ ஆதிக்கம் செலுத்திய பகுதி இது. ஹரியாணா மாநிலத்தை ஒட்டிய இந்தப் பிராந்தியத்தில் பால் தொழில் முக்கியமானது.
இங்கு கடந்த ஆண்டு பெஹ்லுகான் என்பவரும், இந்த ஆண்டு ரக்பர் கான் என்பவரும் பசுகுண்டர்களால் அடித்துக் கொல்லப்பட்டனர். தொடர்ந்து இந்தப் பகுதியில் அவர்கள் ஆதிக்கமும் செலுத்திவந்தார்கள். சமீபத்திய தேர்தலில் ஆல்வார் மாவட்டத்தின் 11 தொகுதிகளில் 2 தொகுதிகளில் மட்டுமே பாஜக வென்றிருக்கிறது. கடந்த தேர்தலில் பாஜக 9 தொகுதிகளை வென்ற பிராந்தியம் இது. “மாடுகள் மிகுந்த பகுதி இது.
இங்கு பால் தொழில் எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு இறைச்சிக்காக மாடுகளை ஏற்றுமதிசெய்வதும் முக்கியமானது. ஆனால், பசுகுண்டர்களின் குறுக்கீடுகளால் பசுக்களை மட்டும் அல்ல; எந்த மாடுகளையுமே வெளியே அனுப்ப முடியவில்லை. கிராமப்புறப் பொருளாதாரம் முடங்கிவிட்டது. விளைவாகவே மக்கள் பாஜகவை இம்முறை புறக்கணித்துவிட்டார்கள்” என்கிறார்கள்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT