Published : 13 Dec 2018 09:50 AM
Last Updated : 13 Dec 2018 09:50 AM

அணைகள் பாதுகாப்பு மசோதா மக்களவையில் தாக்கல்

அணைகள் பாதுகாப்பு மசோதா மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

அணைகள் பாதுகாப்பு தொடர் பாக மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் ஒரே மாதிரியான நடைமுறைகளைப் பின்பற்றும் வகையில் அணைகள் பாது காப்பு மசோதாவை மத்திய அரசு தயாரித்துள்ளது. இம்மசோதா மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அணைகளின் கண்காணிப்பு, ஆய்வு, செயல் பாடு மற்றும் அணைகள் தொடர் பான பேரிடர்களைத் தடுக்கும் வகையில் சில குறிப்பிட்ட அணைகளின் பராமரிப்புக்கும் மசோதா வகை செய்கிறது.

மக்களவையில் நேற்று பல் வேறு பிரச்சினைகள் தொடர்பாக காங்கிரஸ், தெலுங்கு தேசம், அதிமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகளின் அமளிக்கிடையே, சாலை மற்றும் போக்கு வரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி சார்பில் நீர்வளம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மெக்வால் மசோதாவை தாக்கல் செய்தார்.

அணைகள் பாதுகாப்பு மாநில அரசின் அதிகார வரம்புக்கு உட்பட்டது என்றும் நாடாளு மன்றத்தின் அதிகாரத்துக்குள் வராது என்றும் கூறி பிஜூ ஜனதாதளம் உறுப்பினர் பர்த்ருஹரி மஹ்தாப் எதிர்ப்பு தெரிவித்தார்.

ஆனால், இரு மாநிலங்கள் ஏற்றுக்கொண்டால் மசோதாவை தாக்கல் செய்யும் தகுதி அரசுக்கு இருப்பதாக மெக்வால் பதிலளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x