Published : 13 Dec 2018 09:40 AM
Last Updated : 13 Dec 2018 09:40 AM
மேகேதாட்டுவில் அணை கட்டு வதற்கு கர்நாடக அரசு விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கு தடை விதிக்க தேவையில்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கர்நாடகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் கர்நாடக அரசு புதிய அணை கட்ட முடி வெடுத்துள்ளது. இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், கடந்த 22-ம் தேதி, மேகேதாட்டு திட்டத்தின் ஆரம்ப நிலை திட்ட வரைவு அறிக்கைக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. மேலும், விரிவான திட்ட வரைவு அறிக்கை தயாரித்து தாக்கல் செய்யவும் அறிவுறுத்தியது.
இதனை எதிர்த்து, தமிழக அரசு கடந்த 30-ம் தேதி உச்சநீதிமன் றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய் தது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்த ரவின்படி, காவிரி ஆற்றில் கர்நாடக அரசு எந்த புதிய அணையும் கட்ட முடியாது. அவ்வாறு இருக்க, மேகேதாட்டு ஆரம்ப நிலை திட்ட வரைவு அறிக்கைக்கு மத்திய நீர் ஆணையம் அனுமதி அளித்திருப்பதை ரத்து செய்ய வேண்டும். விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிக்கு தடை விதிக்க வேண்டும்.
மேலும், இதற்கு அனுமதி அளித்த மத்திய நீர் ஆணையத்தின் தலைவர் மசூத் ஹூசேன் உள்ளிட்ட 5 பேர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கோரப்பட்டிருந்தது.
இதே கோரிக்கையை வலி யுறுத்தி புதுச்சேரி அரசும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு கடந்த வாரம் மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்தது. அதில், ‘‘மத்திய நீர் ஆணையத்தின் தலைவராக இருக்கும் மசூத் ஹூசேன், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தற்காலிக தலைவ ராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரே இரண்டு ஆணையத்துக்கும் தலை வராக இருப்பதால் ஒருதலை பட்சமாக செயல்படுகிறார். எனவே, அவரை நீக்கிவிட்டு காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு நிரந்தரத் தலைவரை நியமிக்க வேண்டும்'' என கோரப்பட்டி ருந்தது.
இந்த மூன்று மனுக்களும் நீதிபதி கள் ஏ.எம்.கான்வில்கர் மற்றும் அஜய் ரஸ்தோகி ஆகியோர் முன் னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு தரப் பில் ஆஜரான வழக்கறிஞர், மேகே தாட்டு விவகாரத்தில் விரிவான திட்ட வரைவு அறிக்கை தயாரிக் கும் பணியை நிறுத்த வேண்டும். உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக வும், தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகை யிலும் கட்டப்படும் மேகேதாட்டு அணையை எக்காரணம் கொண் டும் அனுமதிக்க கூடாது என வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி கள், ‘‘இப்போதுதான் ஆரம்பக்கட்ட திட்ட வரைவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கும், அணை கட்டுவதற்கு அனுமதி அளிப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனவே, விரிவான திட்ட வரைவு தயாரிக்கும் பணிக்கு தடை விதிக்க தேவையில்லை. மேகேதாட்டு அணை தொடர்பாக விரிவான அறிக்கையை தாமா கவே தயாரிக்கிறார்கள். அங்கு அணை கட்டுவதற்கு முன்பு உச்ச நீதிமன்றத்தின் அனுமதியை பெற வேண்டும்'' எனக் கூறி தமிழக அரசின் மனுக்களை நிராகரித் தனர்.மேலும், மேகேதாட்டு திட்ட விவகாரம் குறித்து கர்நாடக அரசும், மத்திய அரசும் 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
நாடாளுமன்றத்தில் அமளி
இந்நிலையில், நாடாளுமன்றத் தின் இரு அவைகளிலும் மேகே தாட்டு அணை விவகாரத்தை எழுப்பி அதிமுக, திமுக எம்.பி.க்கள் நேற்று கடும் அமளியில் ஈடுபட்டனர். இதேபோல், ரபேல் ஒப்பந்தம், ராமர் கோயில் உள்ளிட்ட விவகாரங்களை எழுப்பி காங்கிரஸ், சிவசேனா கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் நாள் முழுவதும் தள்ளிவைக்கப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT