Published : 11 Dec 2018 08:53 PM
Last Updated : 11 Dec 2018 08:53 PM

கடந்த நான்கரை ஆண்டுகளாக... : 5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்த வைரலாகும் அனுராக் காஷ்யப் ட்வீட்

5 மாநில தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டதையடுத்தும் மக்கள் மாற்றி வாக்களித்தது பற்றியும் இயக்குநரும் படத்தயாரிப்பாளருமான அனுராக் காஷ்யப் மகிழ்ச்சி தெரிவிக்கும் விதமாக சூசகமாக தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

ராஜஸ்தான், சத்திஸ்கர் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் மத்தியப் பிரதேசத்தில் பாஜகவுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக காங்கிரஸ் கடும் போட்டி அளித்து வருகிறது. எந்தக் கட்சிக்கும் அங்கு மெஜாரிட்டி கிடைக்காது போல்தான் இருக்கிறது.

 

இந்நிலையில் அனுராக் காஷ்யப் தன் ட்விட்டர் பதிவில்  பிரேக்கிங் நியூஸ் என்று தலைப்பிட்டு தேர்தல் என்று நேரடியாகக் குறிப்பிடாமல் பதிவிட்ட போது, “கடந்த நான்கரை ஆண்டுகளாக மக்களில் பலர் காது கேளாதவர்களாகவும், பார்வையற்றவர்களாகவும் இருந்தனர். இவர்கள் திடீரென இப்போது பார்க்கிறார்கள்... கேட்கிறார்கள்” என்று ட்வீட் பதிவிட்டுள்ளார்.

இவரது ட்வீட்டுக்கு பெரும்பாலும் ஆதரவாகவும் ஆங்காங்கே எதிர்த்தும் கேலி செய்தும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x