Published : 11 Dec 2018 07:26 PM
Last Updated : 11 Dec 2018 07:26 PM
இந்தி மொழி பேசும் பிரதான 3 மாநிலங்கள் தேர்தல் வாக்கெண்ணிக்கையில் பாஜகவுக்கு தோல்வி முகம் ஏற்பட்டுள்ளதையடுத்தும், மக்கள் மீண்டும் காங்கிரஸ் மீது நம்பிக்கைக் கொண்டிருப்பதாகவும் வாக்காளர்களுக்கு காங்கிரஸ் நன்றி தெரிவித்துள்ளது.
ராஜஸ்தான், சத்தீஸ்கரை பாஜகவிடமிருந்து பிடுங்கிய காங்கிரஸ், மத்தியப் பிரதேசத்திலும் பாஜகவை முந்தியுள்ளது.
இதனையடுத்து காங்கிரஸ் கட்சி தன் அதிகாரப் பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ‘CongressWinsBIG’ என்ற ஹேஷ்டேக்கில், “ ஜனநாயகம் வென்றுள்ளது, தேங்க் யூ இந்தியா, வெறுப்பை ஒதுக்கி அன்பையும், வன்முறையை ஒதுக்கி அமைதிக்கும், பொய்களை ஒதுக்கி உண்மைக்கும் வாக்களித்துள்ளீர்கள்” என்று ட்வீட் இட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT